உள்ளூர் செய்திகள்

ஓசூரில் அமைச்சர்கள் பங்கேற்று நலத்திட்ட பணிகளை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மேயர் சத்யா பார்வையிட்ட காட்சி.

பல்வேறு திட்ட பணிகளை தொடங்கி வைக்க அமைச்சர்கள் நாளை வருகை

Published On 2023-10-20 10:00 GMT   |   Update On 2023-10-20 10:00 GMT
  • புதிய பேருந்து நிலையத்திற்கு அடிக்கல் நாட்டி வைத்தார்.
  • அமைச்சர் கே.என்.நேரு, அமைச்சர் அர.சக்கரபாணி நாளை ஓசூர் வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகராட்சியில், நாளை (சனிக்கிழமை) கட்டுமானப் பணிகளை தொடங்கி வைக்கவும், மீன் இறைச்சி கடைகள் உள்ளிட்ட கட்டு மான பணிகளை தொடங்கி வைக்கவும், நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, உணவு பொருட்கள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி ஆகியோர் நாளை ஓசூர் வருகின்றனர்.

மேலும், திறன் மேம்பாட்டு நூலகம் உள்ளிட்டவை களை அமைச்சர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்ய உள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை, மேயர் எஸ்.ஏ.சத்யா, ஆணையாளர் சினேகா ஆகியோர் நேற்று நேரில் பார்வையிட்டனர்.

Tags:    

Similar News