உள்ளூர் செய்திகள்

ஓட்டப்பிடாரத்தில் பள்ளி மாணவர்களுக்கு மினி மாரத்தான் போட்டி - 11-ந் தேதி நடக்கிறது

Published On 2023-02-03 09:15 GMT   |   Update On 2023-02-03 09:15 GMT
  • 11-ந் தேதி வ.உ.சி. விளையாட்டு கழகத்தின் 35-வது ஆண்டு விழாவை முன்னிட்டு மினி மராத்தான் போட்டி நடைபெறுகிறது.
  • மாணவ- மாணவிகள் வரும் 7-ந் தேதிக்குள் தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ளலாம்.

புதியம்புத்தூர்:

ஓட்டப்பிடாரம் வ.உ.சி. விளையாட்டு கழகம் சார்பில் ஆண்டுதோறும் மாரத்தான் போட்டி நடத்தப்படும். அதன்படி 11-ந் தேதி வ.உ.சி. விளையாட்டு கழகத்தின் 35-வது ஆண்டு விழாவை முன்னிட்டு மினி மராத்தான் போட்டி நடைபெறுகிறது.

இதில் கலந்து கொள்ள விரும்பும் மாணவ- மாணவிகள் தங்கள் பயிலும் பள்ளியின் ஒப்புதலோடு தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ள வ.உ.சி. விளையாட்டு கழகம் கேட்டுக் கொண்டுள்ளது. வரும் 7-ந் தேதிக்குள் வ.உ.சி. விளையாட்டு கழக இணைச் செயலாளரிடம் மாணவர்கள் பெயரை பதிவு செய்ய வேண்டும்.

Tags:    

Similar News