உள்ளூர் செய்திகள்
மினி லாரி மோதி 3 வட மாநில தொழிலாளிகள் பரிதாப சாவு
- மினி லாரி ஒன்று, வேகமாக மோதி நிற்காமல் சென்றுவிட்டது.
- 3 பேரும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஓசூர்,
ஓசூர் அருகே கர்நாடக எல்லையான அத்திப் பள்ளி-ஆனேக்கல் சாலையில் மாயசந்திரா அருகே நேற்று இரவு சுமார் 10 மணியளவில் வட மாநில கூலித் தொழிலாளர்கள் 3 பேர் வேலையை முடித்து, சாலையில் நடந்தவாறு வீட்டுக்கு சென்று கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த மினி லாரி ஒன்று, இவர்கள் மீது வேகமாக மோதி நிற்காமல் சென்றுவிட்டது. இதில் அவர்கள் 3 பேரும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த அத்திப்பள்ளி போலீசார் அங்கு சென்று உடல்களை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அத்திப்பள்ளி அரசு அனுப்பி வைத்தனர்.
மேலும் வாகனத்துடன் தலைமறைவாகிவிட்ட மினி லாரி டிரைவரையும் தேடி வருகிறார்கள்.