உள்ளூர் செய்திகள்

ஆலங்குளம் அருகே குடும்ப தகராறில் மெக்கானிக் தற்கொலை

Published On 2023-08-25 08:44 GMT   |   Update On 2023-08-25 08:44 GMT
  • செந்தில்குமாருக்கு திருமணமாகி மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர்.
  • மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி செந்தில் குமார் பரிதாபமாக இறந்தார்.

நெல்லை:

தென்காசி மாவட்டம் ஊத்துமலை அருகே உள்ள வேலாயுதபுரம் தெற்கு தெருவை சேர்ந்தவர் வேலுச்சாமி. இவரது மகன் செந்தில்குமார் (வயது 36). மெக்கானிக். இவருக்கு திருமணமாகி மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர்.

இந்நிலையில் நேற்று மாலை திடீரென செந்தில்குமார் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்திலேயே செந்தில் குமார் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஊத்துமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். குடும்பத்தகறாறு காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News