உள்ளூர் செய்திகள்
எம்.ஜி.ஆர் மார்க்கெட்டில் கட்டுமானப்பணிகளை மேயர் ஆய்வு
- ரூ.5 கோடியே 88 லட்சம் மதிப்பில் வரும் புதிய வணிக வளாகம் அமைக்கப்பட்டு வருகிறது.
- மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் மாநகராட்சிக்குட்பட்ட, எம்.ஜி.ஆர். மார்க்கெட்டில் மூலதன மானிய நிதி திட்டத்தின் கீழ் ரூ.5 கோடியே 88 லட்சம் மதிப்பில் வரும் புதிய வணிக வளாகம் அமைக்கப்பட்டு வருகிறது.
இதன் கட்டுமான பணிகளை, மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது, மாநகராட்சி ஆணையாளர் சினேகா, துணை மேயர் ஆனந்தய்யா, மாநகராட்சி செயற்பொறியாளர் ராஜாராம், உதவி செயற்பொறியாளர் ராஜேந்திரன், மாமன்ற உறுப்பினர்கள் உள்பட பலர் உடன் இருந்தனர்.