உள்ளூர் செய்திகள்

பாயாசம் சரியில்லை என புகார்.. திருமண நிச்சயதார்த்த விழாவில் மோதல்

Published On 2023-06-05 14:31 GMT   |   Update On 2023-06-05 14:31 GMT
  • மாப்பிள்ளை வீட்டார் தரப்பில் ஆத்திரமடைந்து சாம்பாரை பெண் வீட்டார் மீது ஊற்றியதாக கூறப்படுகிறது.
  • மண்டப வாசலில் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்ட வீடியோ சமூக வலைத்தளத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

மயிலாடுதுறை:

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தெற்கு ரத வீதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற திருமண நிச்சயதார்த்த விழாவில் மணமகன் வீட்டார் மற்றும் மணப்பெண் வீட்டார் இருவரும் ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

நிச்சயதார்த்த விழாவிற்கு வந்தவர்களுக்கு நடந்த விருந்தில் பாயாசம் பரிமாறியுள்ளனர். அப்பொழுது பாயாசம் சரியில்லை எனக் கூறி பெண் வீட்டார் தட்டி கேட்டு, தகாத வார்த்தையால் திட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால் மாப்பிள்ளை வீட்டார் தரப்பில் ஆத்திரமடைந்து சாம்பாரை பெண் வீட்டார் மீது ஊற்றியதாக கூறப்படுகிறது. இதனால் இரு தரப்பினரும் கைகலப்பில் ஈடுபட்டு, ஒருவரையொருவர் தாக்கியதாக தெரிகிறது. மண்டப வாசலில் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்ட வீடியோ சமூக வலைத்தளத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

மோதல் தொடர்பாக தகவல் அறிந்த சீர்காழி போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று இரு தரப்பையும் சமாதானம் செய்து இரு தரப்பையும் அனுப்பி வைத்தனர்.

Tags:    

Similar News