உள்ளூர் செய்திகள்
பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோவில் மாசி பெருந்திருவிழா- நாளை கொடி ஏற்றத்துடன் தொடங்குகிறது
- ஒவ்வொரு ஆண்டும் வென்னி மலை முருகன் கோவில் மாசித் திருவிழா 11நாட்கள் நடைபெறுவது வழக்கம்.
- சப்பரத்தில் சாமி வீதி உலாவரும் நிகழ்ச்சி இரவு 8 மணிக்கு நடைபெற உள்ளது.
தென்காசி:
பாவூர்சத்திரத்தில் அமைந்துள்ள வென்னி மலை முருகன் கோவில் மாசித் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் 11நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா நாளை (சனிக்கிழமை) காலை கொடியேற்றத்துடன் தொடங்கி மார்ச் 7-ந்தேதி வரை நடைபெறுகிறது.
நாளை அதிகாலையில் 4 மணிக்கு கணபதி ஹோமம், 5.30 மணி அளவில் கொடியேற்றம் நடைபெறுகிறது. காலை 10.30 மணிக்கு பக்தர்கள் பால்குடம் எடுத்து வருதல் நிகழ்ச்சியும், மதியம் 12 மணிக்கு உச்சிகால பூஜையும் மற்றும் பாலாபிஷேகமும் நடைபெற உள்ளது. மாலை 6 மணிக்கு 1008 திருவிளக்கு பூஜையும், இரவு 8 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் சாமி வீதி உலாவரும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.