உள்ளூர் செய்திகள்

வேம்பு - அரச மரங்களுக்கு திருமண வைபவ காட்சி

வேம்பு -அரச மரங்களுக்கு திருமணம்

Published On 2022-06-18 11:38 GMT   |   Update On 2022-06-18 11:38 GMT
  • மகா கணபதி கன்னிமார் சாமி கோவிலில் வேம்பு அரச மரங்களுக்கு திருமண வைபவம் நடைபெற்றது.
  • வெள்ளகோவில் மற்றும் தீத்தம் பாளையத்தை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது தோஷங்கள் நிவர்த்தியாக வழிபட்டு சென்றனர்.

வெள்ளகோவில் :

வெள்ளகோவில் அருகே உள்ள தீத்தாம்பாளையத்தில் உள்ள மகா கணபதி கன்னிமார் சாமி கோவிலில் வேம்பு அரச மரங்களுக்கு திருமண வைபவம் நடைபெற்றது.

தோஷங்கள் நிவர்த்தியாக 12 நாட்கள் மண்டல பூஜைகள் நடைபெற்று நேற்று காலை வேம்பு அரச மரங்களுக்கு திருமண வைபவம் நடைபெற்றது. இதில் வெள்ளகோவில் மற்றும் தீத்தம் பாளையத்தை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது தோஷங்கள் நிவர்த்தியாக வழிபட்டு சென்றனர்.

இதற்கான ஏற்பாடுகளை தீத்தாம்பாளையம், வெள்ளகோவில் பகுதி பொதுமக்கள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News