உள்ளூர் செய்திகள்

துக்க நிகழ்ச்சிக்கு சென்று திரும்பியவர் விபத்தில் பலி

Published On 2022-09-16 14:57 IST   |   Update On 2022-09-16 14:57:00 IST
  • வரட்டம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் எதிர்பாராத விதமாக இருவரும் கீழே விழுந்தார்.
  • 108 ஆம்புலன்ஸ் மூலம் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர்.

காவேரிப்பட்டணம்

காவேரிப்பட்டணத்தில் வசித்து வந்தவர் மாதேஷ் (வயது 41). இவர் டூ வீலர் மெக்கானிக் கடை நடத்தி வந்தார். இவருக்கு திருமணம் ஆகி 4 குழந்தைகள் உள்ளனர். இவரும் இவரது நண்பர் சுரேஷ் ஆகிய இருவரும் நேற்று முன்தினம் காவேரிப்பட்டணம் அருகே துக்க நிகழ்ச்சிக்கு சென்று விட்டு ஊர் திரும்பினர்.

வரட்டம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் எதிர்பாராத விதமாக இருவரும் கீழே விழுந்ததில் பலத்த காயம் ஏற்பட்டு பின்னர் அங்கிருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட மாதேஷ் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். இது குறித்து காவேரிப்பட்டணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளி வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். 

Tags:    

Similar News