உள்ளூர் செய்திகள்

ஓசூரில் மடிக்கணினி திருடியவர் கைது

Published On 2023-12-01 15:36 IST   |   Update On 2023-12-01 15:36:00 IST
  • ஓசூரில் மடிக்கணினி திருடியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
  • போலீசார் நடவடிக்கை.

அஞ்செட்டி அருகே உள்ள கோரிபாளையத்தை சேர்ந்தவர் விஜய் (வயது 23). இவர் ஓசூர் பேடரப்பள்ளி காமராஜர் நகர் பகுதியில் தங்கி ஓசூரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் ஆபரேட்டராக வேலை செய்து வருகிறார். கடந்த 28-ந் தேதி நிறுவன வளாகத்தில் வைத்திருந்த இவரது மடிக்கணினி மற்றும் 2 செல்போன்களை மர்ம நபர் திருடிச் சென்றார்.

அது குறித்து விஜய் சிப்காட் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் விசரணை நடத்தியில், அதை திருடியது ஓசூர் பேடரப்பள்ளி ராஜாஜி நகரை சேர்ந்த சந்தோஷ் (30) என தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் மடிக்கணினி மற்றும் 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

Similar News