உள்ளூர் செய்திகள்
ஓசூரில் புகையிலை பொருட்களை கடத்தி வந்தவர் கைது
- சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்ற ஒருவரை பிடித்து விசாரித்தனர்.
- 19 கிலோ புகையிலை பொருட்களை கடத்தி வந்தது தெரிய வந்தது.
கிருஷ்ணகிரி
ஓசூர் டவுன் போலீசார் பஸ் நிலைய பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்ற ஒருவரை பிடித்து விசாரித்தனர்.
அப்போது அவர் ரூ.11 ஆயிரம் மதிப்புடைய 19 கிலோ புகையிலை பொருட்களை கடத்தி வந்தது தெரிய வந்தது.
அவற்றை பறிமுதல் செய்த போலீசார் சென்னை சிட்லப்பாக்கத்தை சேர்ந்த ராஜன் (வயது 55) என்ற நபரை கைது செய்தனர்.