உள்ளூர் செய்திகள்

மாமல்லபுரம் கல்லூரி மாணவர் கடலில் மூழ்கினார்- தேடும் பணி தீவிரம்

Published On 2023-08-14 09:13 GMT   |   Update On 2023-08-14 10:15 GMT
  • மாமல்லபுரத்தில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
  • ராட்சத அலையில் சிக்கி வெங்கட ரோஹித் கடலுக்குள் மூழ்கினார்.

மாமல்லபுரம்:

ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் வெங்கட ரோஹித் (வயது 19). இவர் மாமல்லபுரத்தில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று மதியம் அவர் கல்லூரி நண்பர்களுடன் மாமல்லபுரம் கடற்கரை கோவில் அருகில் கடலில் குளித்தார். அப்போது ராட்சத அலையில் சிக்கி வெங்கட ரோஹித் கடலுக்குள் மூழ்கினார்.

நண்பர்கள் காப்பாற்ற முயன்றும் முடியவில்லை. மீனவர்கள் உதவியுடன் மாமல்லபுரம் போலீசார் கடலில் மூழ்கிய மாணவரை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News