உள்ளூர் செய்திகள்

திருப்பூர் மாதேஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரி விழா

Published On 2023-02-20 11:25 IST   |   Update On 2023-02-20 11:25:00 IST
  • ஸ்ரீ மங்களாம்பிகை சமேத மாதேஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரி வழிபாடு நடைபெற்றது
  • விழா ஏற்பாடுகளை கோவில் கட்டுமான திருப்பணி குழு மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

வீரபாண்டி :

திருப்பூர் 25 வது வார்டு, திருவள்ளுவர் நகர் ஸ்ரீ மங்களாம்பிகை சமேத மாதேஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரி வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி முதல் கால பூஜை இரவு 8 மணிக்கு தொடங்கியது. அபிஷேக ஆராதனை, அலங்கார ஆராதனை 9 மணி வரை நடைபெற்றது. இரண்டாம் கால பூஜை 11 மணிக்கு தொடங்கி அபிஷேக அலங்கார ஆராதனையுடன் நடைபெற்றன. இதனை தொடர்ந்து மூன்றாம் கால பூஜை அதிகாலை 3 மணிக்கு தொடங்கி 4 மணி வரை நடைபெற்றது. நான்காம் கால பூஜை 5 மணிக்கு தொடங்கி 6 மணி வரை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் கட்டுமான திருப்பணி குழு மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News