உள்ளூர் செய்திகள்

பெண்-கூலி தொழிலாளி தூக்குப்போட்டு சாவு

Published On 2023-04-11 08:53 GMT   |   Update On 2023-04-11 08:53 GMT
  • பெண்-கூலி தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
  • சுப்பிரமணியபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

மதுரை

வாடிப்பட்டியைச் சேர்ந்தவர் பூப்பாண்டி அம்மாள் (27). இவர் மதுரை ஐராவதநல்லூர், அந்தோணியார் தெருவை சேர்ந்த வாலிபருடன், திருமணம் செய்யாமல் வாழ்க்கை நடத்தினார். நேற்று அவர் கள்ளக்காதலன் வீட்டுக்கு வந்திருந்தார். அப்போது அவருக்கு வாழ்க்கையில் விரக்தி ஏற்பட்டது. அங்கு பூப்பாண்டி அம்மாள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தெப்பக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பைக்காரா, வயக்காட்டு தெருவை சேர்ந்தவர் ஆனந்த் (41). இவர் கூலி வேலை பார்த்து பிழைப்பு நடத்தி வந்தார். அவருக்கு வாழ்க்கையில் விரக்தி ஏற்பட்டது. சம்பவத்தன்று நள்ளிரவு ஆனந்த் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சுப்பிரமணியபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

Tags:    

Similar News