உள்ளூர் செய்திகள்

வடமாடு மஞ்சு விரட்டு

Published On 2022-08-07 08:25 GMT   |   Update On 2022-08-07 08:25 GMT
  • பாலமேட்டில் வடமாடு மஞ்சு விரட்டு நடந்தது.
  • சுற்று வட்டார கிராமத்தை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.

அலங்காநல்லூர்

பாலமேடு வடக்குத்தெரு பொது மகாசபைக்கு பாத்தியப்பட்ட அய்யனார், கருப்புசாமி ஆடி உற்சவ திருவிழா நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான வடமஞ்சுவிரட்டு நிகழ்ச்சி மஞ்சமலை ஆற்று வாடிவாசலில் நடந்தது.

கோவிலில் இருந்து இளைஞர்கள் வடத்தை இழுத்து வந்து வாடிவாசல் முன்பு கட்டினர். பின்னர் மஞ்சமலை கோவில் காளை உட்பட 20 காளைகள் வடத்தில் அவிழ்த்து விடப்பட்டன. அந்த காளைகளை யாரும் பிடிக்கவில்லை. சீறிப்பாய்ந்த காளைகளை கண்டு இளைஞர்கள் சத்தமிட்டு வரவேற்றனர். இதில் சுற்று வட்டார கிராமத்தை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News