உள்ளூர் செய்திகள்

நாளை மி்ன்நுகர்வோர் குறைதீர்க்கும் முகாம்

Published On 2022-06-15 09:48 GMT   |   Update On 2022-06-15 09:48 GMT
  • மதுரை தெற்கு கோட்டத்தில் நாளை மி்ன்நுகர்வோர் குறைதீர்க்கும் முகாம் நடக்கிறது.
  • இந்த தகவலை மதுரை தெற்கு கோட்ட மின்பகிர்மான செயற்பொறியாளர் மோகன் தெரிவித்துள்ளார்.

மதுரை

மதுரை தெற்கு கோட்ட மின்பகிர்மான செயற்பொறியாளர் அலுவலகத்தில் நாளை (16-ந் தேதி) காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்நுகர்வோர் குறைதீர்க்கும் முகாம், மதுரை பெருநகர் மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் (பொறுப்பு) அம்சவள்ளி தலைமையில் நடக்கிறது.

இதில் தெற்கு கோட்டத்திற்கு உட்பட்ட சுப்பிரமணியபுரம், ஆரப்பாளையம், தமிழ்ச்சங்கம், யானைக்கல், டவுன்ஹால், மீனாட்சி அம்மன் கோவில், மாகாளிப்பட்டி, மகால், ஜான்சிராணி பூங்கா, அரசமரம், தெப்பம், கீழவாசல், முனிச்சாலை, சிந்தாமணி, அனுப்பானடி ஆகிய பகுதிகளை சேர்ந்த மின்நுகர்வோர் குறைகளை நேரிலோ அல்லது மனுக்கள் மூலமாகவோ மேற்பார்வை பொறியாளரிடம் தெரிவித்துக் கொள்ளலாம்.

மேற்கண்ட தகவலை மதுரை தெற்கு கோட்ட மின்பகிர்மான செயற்பொறியாளர் மோகன தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News