உள்ளூர் செய்திகள்

இந்து சமய அறநிலையத்துறை அபகரிக்க முயற்சிப்பதாக கூறப்படும் குமரக்கடவுள் கோவில்.

எனது குடும்ப கோவில்-நிலத்தை அபகரிக்க முயற்சி செய்கிறார்கள்-ரஜினி மன்ற பிரமுகர் போலீசில் புகார்

Published On 2023-10-15 08:18 GMT   |   Update On 2023-10-15 08:18 GMT
  • எனது குடும்ப கோவில்-நிலத்தை அபகரிக்க முயற்சி செய்கிறார்கள் என்று ரஜினி மன்ற பிரமுகர் போலீசில் புகார் செய்தார்.
  • இதனை தடுத்து நிறுத்தி உடனடியாக எங்களுக்கு உரிய சட்டப் பாதுகாப்பை வழங்க வேண்டும்.

மதுரை

மதுரை சின்ன சொக்கி குளம் பகுதியை சேர்ந்தவர் பாலநமச்சிவாயன். ரஜினி மன்ற நிர்வாகியான இவர் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகா சத்திரக் குடி போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்து உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

எங்களது குடும்பத்திற்கு சொந்தமாக பூர்வீகமான குமர கடவுள் சிலை, கிரீடம் மற்றும் எனது தாத்தாவின் சமாதி ஆகியவை முது குளத்தூர் அருகே வளநாடு கிராமத்தில் கருப்ப பிள்ளை மடம் என்ற பெயரில் உள்ளது.

இங்கே பொதுமக்கள் வழிபாடு எதுவும் இல்லை. எங்கள் குடும்ப வழிபாடு மட்டுமே நடந்து வருகிறது. இது தனியார் கோவில். தனியார் சொத்து என்ப தற்கான உரிமை கோரி முதுகுளத்தூர் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்து நிலுவையில் இருந்து வரும் நிலையில் பரமக்குடி இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் அந்த கோவில் மற்றும் இடத்தை அப கரிக்கும் நோக்கில் அதன் சாவியை கேட்டு மிரட்டு கிறார்கள். சாவியை தரா விட்டால் பூட்டை உடைத்து உள்ளே செல்வோம் என்றும் வழக்கு நிலுவையில் இருப் பதையும் பொருட்படுத்தா மல் அதிகார துஷ்பிரயோகம் செய்து வருகிறார்கள்.

யாரோ தூண்டுதலின் பேரில் எங்களது குடும்ப கோவில், நகை மற்றும் இடத்தை அபகரிக்க இந்து சமய அறநிலைத்துறை அதி காரிகள் முயற்சிக்கிறார்கள். எனவே இதனை தடுத்து நிறுத்தி உடனடியாக எங்க ளுக்கு உரிய சட்டப் பாது காப்பை வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரி வித்துள்ளார்.

Tags:    

Similar News