உள்ளூர் செய்திகள்
- மதுரை அருகே மாடு முட்டி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
- இவருக்கு திருமணமாகி சினேகா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.
மேலூர்
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள திருவாதவூைர அடுத்துள்ள ஆண்டிபட்டியை சேர்ந்தவர் முனியசாமி (வயது33). இவர் கட்டிட தொழிலாளியான இவருக்கு திருமணமாகி சினேகா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். இவர் சொந்தமாக மஞ்சு விரட்டு காளை வளர்த்து வருகிறார். சம்பவத்தன்று இந்த காளை முனியசாமியை முட்டி குத்தியது.
இதில் படுகாயமடைந்த முனியசாமி சிகிச்சை பலனின்றி அரசு ஆஸ்பத்தி ரியில் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மேலூர் இன்ஸ்பெக்டர் மன்னவன், சப்- இன்ஸ்பெக்டர் கேசவன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.