உள்ளூர் செய்திகள்

மாணவ, மாணவிகளின் தனித்திறன் கண்காட்சி

Published On 2022-10-22 07:32 GMT   |   Update On 2022-10-22 07:32 GMT
  • மாணவ, மாணவிகளின் தனித்திறன் கண்காட்சி நடந்தது.
  • ஏற்பாடுகளை பள்ளி தலை மை ஆசிரியை மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்த னர்.

திருமங்கலம்

திருமங்கலம் புனித பிரான்சிஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 50-வது பொன்விழா ஆண்டை முன்னிட்டு தமிழ் ஆங்கிலம், அறிவியல், கணிதம், சமூக அறிவியல் ஆகிய பாடங்களின் கீழ் மாணவ மாணவியர்களின் தனித்திறன் கண்காட்சி நடைபெற்றது. 300க்கும் மேற்பட்ட மாணவ மாணவி கள் பல்வேறு தனித்திறன் மாணவர்களின் கற்றல் திறன் இந்த கண்காட்சி யில் இடம் பெற்றி ருந்தது.

பள்ளியின் முதல்வர் ஜான்கென்னடி கண்காட்சி யை தொடங்கி வைத்தார். பள்ளி தாளாளர் பீட்டர் துரை, செயலாளர் ஆனந்த சேவியர் முன்னி லை வகித்தார்.

தனித்திறன் கண்காட்சியை பெற்றோர் கள், பொது மக்கள் அதிக ளவில் கண்டு களித்தனர். சிறப்பாக படங்களை வரைந்த, செயல்வடிவங் களை செய்திருந்த மாணவ, மாணவியர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்க ப்பட்டன. ஏற்பாடுகளை பள்ளி தலை மை ஆசிரியை மற்றும் ஆசிரி யர்கள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News