உள்ளூர் செய்திகள்

12 மணி நேர வேலை சட்டத்தை முழுமையாக திரும்ப பெற எஸ்.டி.பி.ஐ. தீர்மானம்

Published On 2023-04-28 08:39 GMT   |   Update On 2023-04-28 08:39 GMT
  • 12 மணி நேர வேலை சட்டத்தை முழுமையாக திரும்ப பெற வேண்டும்.
  • எஸ்.டி.பி.ஐ. தீர்மானம் எழுந்துள்ளது.

மதுரை

எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாவட்ட தலைவர்கள் கூட்டம் திருச்சியில் நடந்தது. மாநில தலைவர் நெல்லை முபாரக் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். மாநில பொதுச் செயலாளர்கள் அகமது நவாபி, நிஜாம் முகைதீன், கோவை மண்டல செயலாளர் லுக்மனாக்தீன், மதுரை மண்டல தலைவர் முஜிபுர் ரஹ்மான் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு வி.ஏ.ஓ. லூர்து பிரான்சிஸ் படுகொலை சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிப்பது, மணல் கடத்தல் மற்றும் போதை கும்பலை தடுக்கும் அரசு அதிகாரிகளுக்கு முழுமை யான பாதுகாப்பு வழங்க வேண்டும், தொழிலாளர் உழைப்பை சுரண்டும் 12 மணி நேர வேலை திருத்த சட்டத்தை தமிழக அரசு முழுமையாக வாபஸ் பெற வேண்டும், திருச்சியில் மே 5-ந் தேதி நடைபெற உள்ள எஸ்.டி.பி.ஐ. வர்த்தகர் அணி முதல் மாநில மாநாட்டை வெற்றி பெற செய்வது உள்ளிட்ட பல்வேறு தீர்மா–னங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags:    

Similar News