உள்ளூர் செய்திகள்

சீமைக்கருவேல மரங்களை வெட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது

Published On 2023-03-01 09:02 GMT   |   Update On 2023-03-01 09:08 GMT
  • அரசு நிலங்களில் உள்ள சீமைக்கருவேல மரங்களை வெட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
  • மதுரை ஐகோர்ட்டில் அரசு தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

மதுரை

சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த சோமன் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா, தானிபட்டி கிராமத்தில் உள்ள வில்லூர் கண்மாய், பிள்ளையா கண்மாய், வண்ணாரக் கண்மாய், புது ஊரணி மற்றும் அரசு புறம்போக்கு நிலங்களில் உள்ள சுமார் 13 லட்சம் மதிப்புள்ள சீமை கருவேல மரங்கள், நாட்டு கருவேல மரங்கள் மற்றும் இதர மரங்களை தானிபட்டி கிராம பொதுமக்கள் சார்பாக சுப்பிரமணி என்பவர் அரசின் உரிய அனுமதியின்றி சட்ட விரோ தமாக வெட்டி விற்பனை செய்ய முயற்சித்து வருகிறார்.

ஆகவே அரசு சார்பில் மரங்களை வெட்டுவதற்கு பொது ஏலம் நடத்தினால் அரசிற்கு வருவாய் கிடைக்கும். எனவே தானிபட்டி கிராமத்தில் உள்ள வில்லூர் கண்மாய், பிள்ளையா கண்மாய், வண்ணாரக் கண்மாய், புது ஊரணி மற்றும் அரசு புறம்போக்கு நிலங்களில் உள்ள சீமை கருவேல மரங்கள், நாட்டு கருவேல மரங்கள் மற்றும் இதர மரங்களை வெட்டி சட்டவிரோதமாக விற்பனை செய்ய முயற்சிக்கும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும், அரசிற்கு வருவாய் கிடைக்கும் வகையில் பொது ஏலம் நடத்தவும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விக்டோரியா கவுரி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் தானிப்பட்டி கிராம கண்மாய்கள், அரசு புறம்போக்கு நிலங்களில் உள்ள சீமை கருவேல மரங்களை வெட்டு வதற்கான ஒப்பந்தங்கள் விட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து நீதிபதிகள் வழக்கு குறித்து சிவகங்கை மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

Tags:    

Similar News