உள்ளூர் செய்திகள்

சிறப்பு ரத்ததான முகாம்

Published On 2023-10-04 07:42 GMT   |   Update On 2023-10-04 07:42 GMT
  • சிறப்பு ரத்ததான முகாம் நடந்தது.
  • முடிவில் அன்னலெட்சுமி நன்றி கூறினார்.

வாடிப்பட்டி

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அரசு மருத்துவமனையில் காந்தி ஜெயந்தியை யொட்டி சிறப்பு ரத்ததான முகாம் நடந்தது. பேரூராட்சி கவுன்சிலர் டாக்டர் அசோக்குமார் தலைமை தாங்கினார். கவுன்சிலர்கள் இளங்கோவன், சூரியா, வெங்கடேஷ்வரி, பிரியதர்ஷினி, கீதா பால சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செவிலியர் அன்பரசி வரவேற்றார். டாக்டர் தனசேகரன் முகாமை தொடங்கி வைத்து ரத்ததான வழங்கியவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கினார்.

உசிலம்பட்டி அரசு மருத்துவமனை ரத்ததான வங்கி மருத்துவர் உஷாராணி தலைமையில் மருத்துவகுழுவினர், செவிலியர் பயிற்சி கல்லூரி மாணவிகள் பங்கேற்றனர். முன்னாள் கவுன்சிலர் சீனிராஜா, முன்னாள் கூட்டுறவுசங்கதலைவர் பொன்ராம், ஜெயலலிதாபேரவை பேரூர் செயலாளர் தனசேகரன், அ.தி.மு.க.வார்டு செயலாளர் லில்லி, ராஜேந்திரன், பேரூராட்சி கவுன்சிலர்கள் சூரியா, வெங்கடேஷ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் அன்னலெட்சுமி நன்றி கூறினார்.

Tags:    

Similar News