உள்ளூர் செய்திகள்

குறைதீர்க்கும் முகாமில் மேயர் இந்திராணி, ஆணையாளர் சிம்ரன் ஜித்சிங் காலோன், மேற்கு மண்டல தலைவர் சுவிதா விமல் ஆகியோர் பங்கேற்றனர்.

சாலை, குடிநீர் கேட்டு மேயரிடம் பொதுமக்கள் மனு

Published On 2022-08-23 08:20 GMT   |   Update On 2022-08-23 08:20 GMT
  • மதுரை மேற்கு மண்டலத்தில் குறை தீர்க்கும் கூட்டத்தில் சாலை, குடிநீர் கேட்டு மேயரிடம் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.
  • பெயர்மாற்றம், வீட்டுவரி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை குறித்து 50க்கும் மேற்பட்ட கோரிக்கை மனுக்கள் வரப்பெற்றன.

திருப்பரங்குன்றம்

மதுரை மாநகராட்சி யின் மேற்கு மண்டலத்துக்கு உட்பட்ட திருப்பரங்குன்றத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் இன்று நடந்தது.

திருப்பரங்குன்றம் மேற்கு மண்டல அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு மேயர் இந்திராணி தலைமை வகித்தார். மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன் ஜித்சிங் காலோன், மேற்கு மண்டல தலைவர் சுவிதாவிமல் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் கவுன்சி லர்கள் இந்திரா காந்தி, விஜயா உள்பட பலர் கலந்து கொண்டனர். திருப்பரங்குன்றம் பகுதியில் பஸ்நிலையத்தை மீண்டும் செயல்படுத்தவும், மேம்பாலம் அருகே உள்ள சர்வீஸ் சாலையை பயன்பாட்டுக்கு கொண்டு வரவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

திருநகர் விஸ்தரிப்பு பகுதியான 94-வது வார்டு பகுதியில் எஸ்.ஆர்.வி. நகர் பகுதியில் சாலைவசதி மற்றும் தெருவிளக்கு வசதி செய்து தருமாறு கோரிக்கை விடுத்து அந்தப்பகுதி பொதுமக்கள் மேயர் இந்திராணியிடம் மனு கொடுத்தனர். திருநகர் பகுதியில் கழிவுநீர் கால்வாயை சீரமைக்க வேண்டும். ஆக்கிரமி ப்புகளை அகற்றக்கோரியும் அந்தப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதேபோல பெய ர்மாற்றம், வீட்டுவரி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை குறித்து 50க்கும் மேற்பட்ட கோரிக்கை மனுக்கள் வரப்பெற்றன. பொதுமக்களின் கோரி க்கைகளை நிறைவேற்று வதாக அதிகாரிகள் பொது மக்களு க்கு வாக்குறுதி அளித்து அனுப்பி வை த்தனர்.

Tags:    

Similar News