உள்ளூர் செய்திகள்

பிளஸ்-2 மாணவி மாயம்

Published On 2023-05-13 07:34 GMT   |   Update On 2023-05-13 07:34 GMT
  • பிளஸ்-2 மாணவி மாயமானார்.
  • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மதுரை

மதுரை பெத்தானி யாபுரம் மேட்டுத்தெரு கோடாங்கி காம்பவுண்டை சேர்ந்தவர் விஜய்பாண்டி, ஆட்டோ டிரைவர். இவரது மனைவி அன்னலட்சுமி(42). இவர்களது மகள் அர்ச்சனா(19), பிளஸ்-2 படித்துவிட்டு வீட்டில் இருந்தார்.

அன்ன லட்சுமியும், மகனும் சேர்ந்து ஆரப்பாளையம் கண்மாய் கரை பகுதியில் சிக்கன் கடை வைத்துள்ளனர். கடந்த 6-ந் தேதி மதியம் அன்னலட்சுமி சாப்பிடு வதற்காக வீட்டுக்கு வந்தபோது அர்ச்சனா மாயமாகி விட்டது தெரியவந்தது.

பல இடங்களில் தேடிப்பா ர்த்தும் தகவல் கிடைக்க வில்லை.

இதுகுறித்து தாயார் கரிமேடு போலீசில் புகார் செய்தார். அதில், தங்கள் கடைக்கு வந்து செல்லும் கண்மாய் கரையை சேர்ந்த கவுதம் என்பவர் அர்ச்சனாவை அழைத்து சென்றிருக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News