எம்.ஜி.ஆர். சிலைக்கு அ.தி.மு.க.வினர் மரியாதை
- அலங்காநல்லூர் அருகே எம்.ஜி.ஆர். சிலைக்கு அ.தி.மு.க.வினர் மரியாதை செலுத்தினர்.
- அழகாபுரி, அ.புதுப்பட்டி, உள்ளிட்ட பல கிராமங்களில் கட்சி கொடியேற்றப்பட்டு இனிப்பு வழங்கப்பட்டது.
அலங்காநல்லூர்
அ.தி.மு.க. 51-ம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி அலங்காநல்லூர் ஒன்றியம் சார்பில் கோவிலூரில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு ஒன்றிய செயலாளர் கல்லணை ரவிசந்திரன் தலைமையில் மாலை அணிவித்து, கட்சி கொடியேற்றி இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
அழகாபுரி, அ.புதுப்பட்டி, உள்ளிட்ட பல கிராமங்களில் கட்சி கொடியேற்றப்பட்டு இனிப்பு வழங்கப்பட்டது. இதில் அவைத்தலைவர் பாலகிருஷ்ணன், துணை செயலாளர் சம்பத், நகர் செயலாளர் அழகுராஜ், பாசறை மாவட்ட இணை செயலாளர் உமேஷ் சந்தர், ஒன்றிய கவுன்சிலர் ராதாகிருஷ்ணன், பேரூராட்சி கவுன்சிலர் சுந்தர், ஒன்றிய இளைஞரணி சுந்தரம், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மாணிக்கம், அழகாபுரி கிளை செயலாளர்கள் ரகுபதி, பாலகிருஷ்ணன், ஊராட்சி செயலாளர் ஜெயராமன், பெரிய இலந்தைகுளம் கிளை செயலாளர் ஜெகதீஷ், செந்தில்குமார், கோவிலூர் கிளை செயலாளர் நடராஜன், ஜெகதீசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.