உள்ளூர் செய்திகள்

கூலி தொழிலாளி-முதியவர் தற்கொலை

Published On 2023-04-07 08:55 GMT   |   Update On 2023-04-07 08:55 GMT
  • கூலி தொழிலாளி-முதியவர் தற்கொலை செய்து கொண்டனர்.
  • மேலவளவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை

மதுரை சொக்கநாதபுரத்தைச் சேர்ந்தவர் தனபாலகிருஷ்ணன் (45). கூலித் தொழிலாளி. இவருக்கு குடிப்பழக்கம் இருந்தது. அவர் எந்நேரமும் குடித்து விட்டு ஊர் சுற்றினார். இதை மனைவி தட்டி கேட்டார். இதன் காரணமாக கணவன்- மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. வாழ்க்கையில் விரக்தி அடைந்த தனபால கிருஷ்ணன், சம்பவத்தன்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

மதுரை புலிப்பட்டியை சேர்ந்தவர் பூசாரி (வயது 70). இவருக்கு நீரிழிவு நோய் இருந்து வந்தது. இதனால் அவருக்கு அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவரை உறவினர்கள் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து நோயின் பாதிப்பு அதிகரித்து வந்ததால் அவர் மனமுடைந்தார். இதைத்தொடர்ந்து பூசாரி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது பற்றிய புகாரின் பேரில் மேலவளவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News