உள்ளூர் செய்திகள்

கப்பலூர் டோல்கேட்டை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும்

Published On 2023-07-31 05:49 GMT   |   Update On 2023-07-31 05:49 GMT
  • கப்பலூர் டோல்கேட்டை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும்.
  • ஓய்வூதியர் சங்க கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

மதுரை

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அனைத்து ஓய்வூதியர்கள் சங்கத்தின் திருமங்கலம் கோட்ட நிர்வாகிகள் ஆலோ சனை கூட்டம் நடைபெற்றது. கோட்டத்தலைவர் இளங் கோ தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் முத்து ராமலிங்கம் முன்னிலை வகித்ததார். கோட்ட செயலாளர் ராஜேந்திரன் ஆண்டறிக்கை மற்றும் தீர் மானங்களை வாசித்தார்.

இந்த கூட்டத்தில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்கள், மத்திய அரசு உடனடியாக பெட்ரோல், டீசல் விலையை குறைக்கவேண்டும், திருமங் கலம் அருகேயுள்ள கப்ப லூர் டோல்கேட் நகராட்சி எல்லையிலிருந்து 5 கி.மீ தூரத்திற்குள் விதிமுறை களை மீறி அமைந்துள்ளது.எனவே இங்கிருந்து டோல் கேட்டினை அகற்றி வேறு இடத்திற்கு இடம் மாற்றம் செய்ய மத்திய அரசு உடனடி யான நடவடிக்கை எடுக்க வேண்டும்,

திருமங்கலம் நகரில் வெளியூர் பஸ்ஸ்டாண்ட் பணிகள், ெரயில்வே மேம் பால பணிகளை உடனடி யாக தொடங்க வேண்டும், திருமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்ட கப்ப லூரில் ஆர்.டி.ஓ. அலுவல கம் அருகே இடம் ஒதுக்கீடு செய்து கொடுத்த தமிழக அரசுக்கும் மாவட்ட நிர்வா கத்திற்கும் பாராட்டுகளை தெரிவித்து கொள்ளவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த கூட்டத்தில் கோட்ட துணைத்தலைவர் பால கிருஷ்ணன் மாநில கவுரவ தலைவர் பரமேஸ்வரன், திருமங்கலம் கோட்டத்தினை சேர்ந்த ஓய்வுபெற்ற ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள், அலுவலர்கள் கலந்து கொண்டனர். முடிவில் பொருளாளர் சோமசுந்தரம் நன்றி கூறினார்.

Tags:    

Similar News