உள்ளூர் செய்திகள்

தவணை தவறிய கடன் தொகைக்கான வட்டி-அபராத வட்டி தள்ளுபடி

Published On 2023-03-18 09:47 GMT   |   Update On 2023-03-18 09:47 GMT
  • தவணை தவறிய கடன் தொகைக்கான வட்டி-அபராத வட்டி தள்ளுபடி செய்யப்படுகிற.
  • சலுகை காலம் 3.3.2023-ல் இருந்து 6 மாதங்களுக்கு அதாவது 2.9.2023 வரை மட்டும் அமலில் இருக்கும்.

மதுரை

மதுரை மண்டல துணை பதிவாளர் (வீட்டுவசதி) வெளியிட்டுள்ள செய்திக்கு றிப்பில் கூறியிருப்பதாவது:

மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள அனைத்து வகை கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்களில் கடன் பெற்று தவணை செலுத்த தவறிய கடன்தாரர்கள் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள ஒரு முறை கடன் தீர்வு திட்டத்தின் கீழ், செலுத்த வேண்டிய அசல் மற்றும் வட்டி முழுவதும் செலுத்தும்பட்சத்தில் அவர்கள் செலுத்த வேண்டிய தவணை தவறிய வட்டி மற்றும் அபராத வட்டி தள்ளுபடி செய்யப்படும். அதற்கான சலுகை காலம் 3.3.2023-ல் இருந்து 6 மாதங்களுக்கு அதாவது 2.9.2023 வரை மட்டும் அமலில் இருக்கும்.

அதன் பிறகு இத்திட்டம் செயல்பாட்டில் இருக்காது என அரசு அறிவித்துள்ளது. எனவே தவணை தவறிய அனைத்து உறுப்பினர்களும் இச்சலுகையை தவறாமல் பயன்படுத்தி அசல் மற்றும் வட்டியினை மட்டும் செலுத்தி பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறது.

மேலும், இச்சலுகை தொடர்பாக விவரங்களுக்கு தொடர்புடைய கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்களை நேரில் அணுகவும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News