உள்ளூர் செய்திகள்

வனத்துறையினருக்கு தீ தடுப்பு ஒத்திகை பயிற்சி

Published On 2023-04-22 08:25 GMT   |   Update On 2023-04-22 08:25 GMT
  • வனத்துறையினருக்கு தீ தடுப்பு ஒத்திகை பயிற்சி நடந்தது.
  • வனச்சரக அலுவலர் வெங்கடேசன் தலைமை தாங்கினார்.

வாடிப்பட்டி

வாடிப்பட்டி தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை சார்பில் ஆண்டிபட்டியில் உள்ள சோழவந்தான் வனச்சரக அலுவலகத்தில் வனத்துறையினருக்கு தீ தடுப்பு ஒத்திகை பயிற்சி நடந்தது. வனச்சரக அலுவலர் வெங்கடேசன் தலைமை தாங்கினார்.வனவர்கள் பூபதி ராஜன், லோகநாதன், முருகேசன் முன்னிலை வகித்தனர். தீயணைப்பு நிலைய அலுவலர் சதக்கத்துல்லா தலைமையில் வீரர்கள் தீ தடுப்பு ஒத்திகை பயிற்சி நடத்தினர். வனப்பகுதியில் தீ பிடித்தால் அணைக்கும் முறை பற்றியும், புயல், மழை, வெள்ளம் பேரிடர் காலங்களில் மீட்கும் முறை பற்றியும் உள்ளிட்ட செயல்முறை கருவிகளோடு பயிற்சியளித்தனர்.

Tags:    

Similar News