உள்ளூர் செய்திகள்

அரசு பள்ளிக்கு முன்னாள் மாணவிகள் உதவி

Published On 2023-01-03 07:59 GMT   |   Update On 2023-01-03 07:59 GMT
  • வாடிப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு முன்னாள் மாணவிகள் நிதி உதவி அளித்தனர்.
  • மின் மோட்டார், குப்பை கூடைகள் உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கப்பட்டன.

வாடிப்பட்டி

வாடிப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 1996-ம் ஆண்டு படித்த முன்னாள் மாணவிகள் ஒருங்கிணைந்து ''எவர் கிரீன் 96'' நிகழ்ச்சியை பள்ளி வளாகத்தில் நடத்தினர். தலைமை ஆசிரியர் ஆஷா தலைமை தாங்கினார். முன்னாள் பேரூராட்சி தலைவர்-கவுன்சிலர் கிருஷ்ணவேணி பால்பாண்டியன் முன்னிலை வகித்தார். முன்னாள் மாணவி பிரியா வரவேற்றார். ராஜயோக தியானம் கூடத்தின் அமைப்பாளர்-ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ராஜம்மாள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவிகளிடம் மலரும் நினைவுகளை பகிர்ந்தார்.

விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.மேலும் முன்னாள் மாணவிகள் சார்பில் மின் மோட்டார், குப்பை கூடைகள் உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை சுசீலா தேவி செய்திருந்தார். சித்ரா தொகுத்து வழங்கினார். ஜெயந்தி நன்றி கூறினார்.

Tags:    

Similar News