உள்ளூர் செய்திகள்

கருத்தரங்கில் அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன், மஸ்தான் மற்றும் பீட்டர் அல்போன்ஸ், கலெக்டர் அனீஷ்சேகர் ஆகியோர் உறுதிமொழி எடுத்து கொண்டனர்.

ஆதிக்க சிந்தனை ஒருபோதும் தலை தூக்கக் கூடாது - அமைச்சர் கீதாஜீவன்

Published On 2022-12-18 08:55 GMT   |   Update On 2022-12-18 08:55 GMT
  • ஆதிக்க எண்ணம் ஒருபோதும் தலை தூக்கக்கூடாது என அமைச்சர் கீதாஜீவன் கூறினார்.
  • சிறுபான்மையினருக்கு அனைத்து உரிமை களும் வழங்கப்பட்டு உள்ளது.

மதுரை

தமிழ்நாடு சிறுபான்மை ஆணையம் சார்பில் மதுரையில் இன்று சிறப்பு கருத்தரங்கு நடந்தது. அமைச்சர் செஞ்சி மஸ்தான் தலைமை தாங்கி னார். சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் வரவேற்றார்.

அமைச்சர்கள் கீதா ஜீவன், பழனிவேல் தியாகராஜன், மனோ தங்கராஜ் ஆகியோர் நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

அமைச்சர் கீதா ஜீவன் பேசியதாவது:-

அரசியலமைப்பு சட்டத்தில் சிறுபான்மையி னருக்கு அனைத்து உரிமை களும் வழங்கப்பட்டு உள்ளது. அவர்களுக்கு பெரு பான்மையினர் பாதுகாப்பு வழங்க வேண்டும். அவர்க ளுக்கு அரணாக இருக்க வேண்டும்.

தற்போதைய சூழ்நிலை யில் மக்களிடையே சாதி-மதம் அடிப்படையில் பிரி வினை ஏற்படுத்தி விடலாம் என்று நோட்டாவோடு போட்டி போடும் ஒரு குழு திட்டமிட்டு வருகிறது. மத உணர்வை மதிப்போம், மதவெறி கொள்ளாதே என்பதுதான் தி.மு.க.வின் கொள்கை. நம்மிடம் ஆதிக்க எண்ணம் ஒருபோதும் தலை தூக்கக்கூடாது.

இவ்வாறு அவர் பேசினார்.

அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசுகையில், நமது கலாச்சாரத்தில் சிறப்பான அடையாளங்கள் அனைத்தும் சிறுபான்மையி னரால் வந்தது. அவர்கள் நடத்தும் கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்கள் நன்றாக திறமைகளை வெளிப்படுத்து கின்றனர். எல்லோரும் இணைந்து சமுதாயத்தை வழிநடத்தி செல்கிறோம். தமிழக வளர்ச்சிக்கு பல சமுதாயத்தினர் பெரிய அளவில் பங்களிப்பு கொடுத்துள்ளனர். எனக்கு கல்வி, திறமை இருந்தாலும் முதல்வர் தரும் ஆதரவும் ஊக்கமும் மட்டுமே என் பணி சிறப்பாக அமைய ஊன்றுகோலாக விளங்கி வருகிறது.

இந்திய அரசு ரத்து செய்த சிறுபான்மை மாணவர் கல்வி உதவித்தொகையை, மாநில அரசு வழங்குவது தொடர்பாக முதல்வருடன் கலந்து பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

இதில் எம்.பி.க்கள் வெங்கடேசன், நவாஸ்கனி, மாணிக்கம்தாகூர், எம்.எல்.ஏ.க்கள் இனிகோ இருதய ராஜ், ஆளூர் ஷா நவாஸ், பிரின்ஸ், அப்துல் வஹாப், கோ.தளபதி, அப்துல்சமது, ராஜேஷ்குமார், புதூர் பூமிநாதன், சோழவந்தான் வெங்கடேசன், சிறு பான்மையினர் ஆணைய துணைத் தலைவர் மஸ்தான், மதுரை கத்தோலிக்க உயர்மறை மாவட்ட பேராயர் அந்தோணி பாப்புசாமி, சி.எஸ்.ஐ. பேராயர் ஜெயசிங்பிரின்ஸ் பிரபாகரன், பெந்த கோஸ்தே திருச்சபை தேசிய துணை தலைவர் எடிசன், மதுரை மாவட்ட முஸ்லிம் ஐக்கிய ஜமாத் தலைவர் லியாகத்அலி, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை முதன்மை செயலாளர் மங்கத்ராம் சர்மா, இயக்குநர் சுரேஷ்குமார், கலெக்டர் அனீஸ்சேகர், மேயர் இந்திராணி, அமெரிக்கன் கல்லூரி முதல்வர் தவமணி கிறிஸ்டோபர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News