உள்ளூர் செய்திகள்

பேரிடர் மீட்புப் பணி செயல்விளக்கம்

Published On 2023-09-28 07:13 GMT   |   Update On 2023-09-28 07:13 GMT
  • வாடிப்பட்டியில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை சார்பில் பேரிடர் மீட்புப் பணி செயல் விளக்கம் நடந்தது.
  • நிலைய அதிகாரி சதக்கத்துல்லா தலைமை தாங்கினார்.

வாடிப்பட்டி

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை சார்பில் ரெயில் நிலையம் அருகே உள்ள தனியார் ஆலையில் வடகிழக்கு பருவ மழையையொட்டி பேரிடர் மீட்பு பணி செயல்முறை விளக்க பயிற்சி முகாம் நடந்தது.

முகாமிற்கு நிலைய அதிகாரி சதக்கத்துல்லா தலைமை தாங்கினார். இதில் தீ பேரிடர் காலங்களில் உயிர்களை எப்படி காப்பாற்றுவது, எப்படி தற்காத்துக் கொள்வது, எப்படி மீட்புப் பணிகளை மேற்கொள்வது என்பது குறித்து தீயணைப்பு வீரர்கள் ஆலை தொழிலாளர்களுக்கு செயல்விளக்கம் அளித்தனர்.

Tags:    

Similar News