உள்ளூர் செய்திகள்

ராஜாஜி பூங்காவில் மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் வசூலிக்கக்கூடாது

Published On 2022-12-19 09:27 GMT   |   Update On 2022-12-19 09:27 GMT
  • ராஜாஜி பூங்காவில் மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் வசூலிக்கக்கூடாது. என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
  • இது தொடர்பாக கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

மதுரை

தமிழ்நாடு தவழும் மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு சார்பில் 30-க்கும் மேற்பட்டோர் இன்று கலெக்டர் அலுவலகம் வந்தனர். அவர்கள் அதிகாரிகளை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

அதில், மதுரை ராஜாஜி சிறுவர் பூங்காவில் மாற்றுத்திறனாளிகள் எவ்வித கட்டணமுமின்றி அனுமதிக்கப்பட்டனர். ஆனால் கடந்த 6 மாதமாக மாற்றுத்திறனாளிகள் கண்டிப்பாக நுழைவு கட்டணம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது.

25 ஆண்டுகளுக்கு மேலாக கட்டணமின்றி சென்று வந்ததைபோன்று மீண்டும் மாற்றுத்திறனாளிகள் பூங்காவிற்கு இலவசமாக செல்ல அனுமதி அளிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

Tags:    

Similar News