உள்ளூர் செய்திகள்

 ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைத்து பிரிவு பணியாளர்கள்.

மதுரை மாநகராட்சி அனைத்து பிரிவு பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2022-11-22 09:11 GMT   |   Update On 2022-11-22 09:11 GMT
  • மதுரை மாநகராட்சி அனைத்து பிரிவு பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
  • ஓய்வு பெற்ற நிரந்தர பணியாளருக்கு பணப்பலன்களை வழங்க வேண்டும்

மதுரை

மதுரை மாநகராட்சி அலுவலகம் முன்பு, சி.ஐ.டி.யு. தொழிற்சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட அனைத்து பிரிவு பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் துப்புரவு பணி, பாதாளசாக்கடை, ஓட்டுநர், பம்பிங் ஸ்டேசன், தெருவிளக்கு, பிட்டர் கூலி, பார்க் மஸ்தூர், கம்ப்யூட்டர், எழுத்தர், அலுவலக பணியாளர், துப்புரவு மேற்பார்வையாளர், பில் கலெக்டர் உள்பட சி மற்றும் டி பிரிவு பணிகளை தனியார் மயமாக்கும் அரசாணை 152-ஐ ரத்து செய்ய வேண்டும்.

ஐகோர்ட்டு உத்தரவின்படி தினக்கூலிகளை நிரந்தரம் செய்ய வேண்டும், கிராமப் பஞ்சாயத்து துப்புரவு பணியாளர்களை காலமுறை ஊதியத்தில் கொண்டு வர வேண்டும்.

ஓய்வு பெற்ற நிரந்தர பணியாளருக்கு பணப்பலன்களை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

Tags:    

Similar News