உள்ளூர் செய்திகள்

மீனாட்சி அம்மன் கோவிலில் காணிக்கை உண்டியல் எண்ணும் பணி

Published On 2023-01-24 09:19 GMT   |   Update On 2023-01-24 09:19 GMT
  • மீனாட்சி அம்மன் கோவிலில் காணிக்கை உண்டியல் மூலம் ரூ.1.47 கோடி கிடைத்தது.
  • உண்டியல் திறப்பின் போது ரூ.1 கோடியே 47 லட்சத்து 43 ஆயிரத்து 642 கிடைத்தது.

மதுரை

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில் செயல் அலுவலர் அருணாசலம் முன்னிலையில் இந்த கோவில் மற்றும் 11 உப கோவில்களின் காணிக்கை உண்டியல்கள் திறந்து எண்ணும் பணி நடந்தது.

இதில் திருப்பரங்குன்றம், முருகன் கோவில் துணை ஆணையர், மீனாட்சி அம்மன் கோவிலின் தக்கார் பிரதிநிதி, கண்கா ணிப்பாளர், மதுரை இந்து சமய அறநிலையத்துறை தெற்கு மற்றும் கள்ளிக்குடி ஆய்வர்கள், கோவில் பணியாளர்கள், வங்கி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

உண்டியல் திறப்பின் போது ரூ.1 கோடியே 47 லட்சத்து 43 ஆயிரத்து 642 கிடைத்தது. மேலும் பலமாற்று பொன் இனங்கள் 465 கிராமும், வெள்ளி இனங்கள் 890 கிராமும், அயல்நாட்டு ரூபாய் நோட்டுக்கள் 497 எண்ணமும் கிடைத்தன.

Tags:    

Similar News