உள்ளூர் செய்திகள்

ஓடையில் மூழ்கி கல்லூரி மாணவி சாவு

Published On 2022-08-31 08:03 GMT   |   Update On 2022-08-31 08:03 GMT
  • திருமங்கலம் அருகே ஓடையில் மூழ்கி கல்லூரி மாணவி இறந்தார்.
  • உலகாணி கிராம நிர்வாக அலுவலர் \வடிவேலு கூடக்கோவில் போலீசில் புகார் செய்தார்.

திருமங்கலம்

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள உலகாணியை சேர்ந்தவர் ஆண்டி. இவரது மகள் முத்துலெட்சுமி (வயது19).இவர் மதுரையில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

நேற்று காலை முத்துலட்சுமி அதே பகுதியில் உள்ள ஓடையில் குளிக்க சென்றார். அப்போது ஆழமான பகுதிக்கு சென்றுவிட்ட அவர் தண்ணீரில் மூழ்கிவிட்டார்.

இதனை கண்ட பொதுமக்கள் கூடக் கோவில் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதற்கிடையே மாணவி யின் உறவினர்கள் தண்ணீரில் மூழ்கி இறந்த முத்துலட்சுமியின் உடலை மீட்டனர். அவர்கள் சம்பவ இடத்திற்கு போலீசார் வருவதற்குள் அவரது உடலை எரித்து விட்டனர். இதுபற்றி மாணவி முத்துலட்சுமியின் சித்தப்பா தகவல் தெரிந்து விசாரிக்க நேரில் வந்துள்ளார். அப்போது அவர் முத்துலட்சுமியின் உடல் எரிக்கப்பட்டதை அறிந்து அதிர்ச்சியடைந்தார்.

இதைத்தொடர்ந்து அவர் திருமங்கலம் - காரியாபட்டி ரோட்டில் தனிநபராக சாலை மறியல் போராட்டம் நடத்தினார். அவரை உறவினர்கள் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

இதுபற்றி உலகாணி கிராம நிர்வாக அலுவலர் வடிவேலு கூடக்கோவில் போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் போலீசார் மாணவியின் உடலை எறித்த அவரது தந்தை ஆண்டி, தாத்தா முருகன் மற்றும் உறவினர்கள் பாக்கியராஜ், சுந்தரம் ஆகிய 4 பேர் மீது கூடக்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News