உள்ளூர் செய்திகள்

ரத்த தான முகாம்

Published On 2023-08-01 06:19 GMT   |   Update On 2023-08-01 06:19 GMT
  • மதுரை அருகே பாலமேட்டில் ரத்த தான முகாம் நடந்தது.
  • இந்த முகாமில் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

அலங்காநல்லூர்

மதுரை மாவட்டம் பாலமேடு தனியார் மண்டபத்தில் அரசு ராஜாஜி மருத்துவமனை மற்றும் ஏ.வி.பி. குழுமம் இணைந்து ரத்த தான முகாமை நடத்தியது. இந்த முகாமை ஏ.வி.பி. குழுமத்தின் நிறுவனர் டாக்டர் பார்த்திபன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். பேரூராட்சி சேர்மன் சுமதி பாண்டியராஜன், முன்னிலை வகித்தார். ரத்த வங்கி மருத்துவ அலுவலர்கள், செவிலியர்கள், முகாமை ஒருங்கிணைத்தனர். இந்த முகாமில் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ரத்த தானம் வழங்கினர்.

பின்னர் அவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. இதில் ரத்த தானம் வழங்குவதன் அவசியம் குறித்தும் விழிப்புணர்வு செய்யப்பட்டது.

Tags:    

Similar News