உள்ளூர் செய்திகள்

ஆரோக்கிய அன்னை திருத்தலத்தில் புத்தாண்டு சிறப்பு திருப்பலி

Published On 2023-01-01 08:05 GMT   |   Update On 2023-01-01 08:05 GMT
  • ஆரோக்கிய அன்னை திருத்தலத்தில் புத்தாண்டு சிறப்பு திருப்பலி நடந்தது.
  • பங்குத்தந்தை வளன் தலைமை தாங்கினார். நிர்வாகி அந்தோணிஜோசப், கஸ்பர், அருண் சகோதரர் ஸ்டீபன் பாபு ஆகியோர் கலந்துகொண்டனர்.

வாடிப்பட்டி

வாடிப்பட்டியில் ''தென்னகத்து வேளாங்கண்ணி'' என்று போற்றப்படும் ஆரோக்கிய அன்னை திருத்தலம் உள்ளது. இங்கு ஆங்கில புத்தாண்டு சிறப்பு திருப்பலி நடந்தது.

திருத்தல பங்குத்தந்தை வளன் தலைமை தாங்கினார். நிர்வாகி அந்தோணிஜோசப், கஸ்பர், அருண் சகோதரர் ஸ்டீபன் பாபு ஆகியோர் கலந்துகொண்டனர். நள்ளிரவு 11.30மணிக்கு 2022-ம் ஆண்டுக்கு நன்றி திருப்பலியும், 12 மணிக்கு 2023-ம்ஆண்டு பிறந்ததை யொட்டி சிறப்பு திருப்பலியும் நடந்தது. புத்தாண்டை வரவேற்று பாடல்கள் பாடினர்.

இதில் மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், சிவகங்கை, கன்னியாகுமரி, நாகர்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராள மான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை இன்ஸ்பெக்டர் நித்தியபிரியா தலைமையில் போலீசார் செய்திருந்தனர்.

Tags:    

Similar News