உள்ளூர் செய்திகள்

அ.ம.மு.க. சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு

Published On 2023-05-03 13:12 IST   |   Update On 2023-05-03 13:12:00 IST
  • அ.ம.மு.க. சார்பில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது.
  • சோழவந்தான் பேரூரில் சின்னகடை வீதியில் அமைக்கப்பட்டிருந்தது.

சோழவந்தான்

சோழவந்தான் பேரூர் அ.ம.மு.க. சார்பில் சின்னகடை வீதியில் அமைக்கப்பட்டிருந்த நீர்மோர் பந்தலை மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் மகேந்திரன் திறந்து வைத்து பொதுமக்களுக்கு மோர், சர்பத், தர்பூசணிகளை வழங்கினார்.

இதில் பேரூர் செயலாளர்கள் திரவியம், மதன், மாவட்ட இணை செயலாளர் வீரமாரி பாண்டியன், எம்.ஜி.ஆர். மன்ற நிர்வாகிகள் சந்திரசேகர், பாலு ராஜன், ஒன்றிய செயலாளர்கள் விருமப்பராஜன், நிர்வாகிகள் மீனாட்சிசுந்தரம், ரபீக், ராமகிருஷ்ணன், முருகன், ராசுமாரியப்பன், அம்பி கிருஷ்ணன், முத்துபாண்டி, வழக்கறிஞர் பிரிவு பிச்சைமணி, மாரியப்பன், மகளிர் அணி பாப்பாயி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News