உள்ளூர் செய்திகள்

அ.தி.மு.க. சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு

Published On 2023-04-11 08:46 GMT   |   Update On 2023-04-11 08:46 GMT
  • வாடிப்பட்டியில் அ.தி.மு.க. சார்பில் நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டது.
  • முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் நீர்மோர் பந்தலை திறந்து வைத்து பேசினார்.

வாடிப்பட்டி

வாடிப்பட்டி பேரூர் அ.தி.மு.க. சார்பில் சந்தைவாசல் முன்பு கோடை கால நீர்-மோர் பந்தல் திறக்கப்பட்டது. பேரூர் செயலாளர் அசோக் குமார் தலைமை தாங்கினார்.

மாநில பேரவை துணைச் செயலாளர் தனராஜ், மாநில இணைச்செயலாளர் வெற்றிவேல், மாவட்ட பொருளாளர் திருப்பதி, ராமகிருஷ்ணன், வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் கணேசன், முன்னாள் பேரூராட்சி துணைத் தலைவர் சோனை, யூனியன் சேர்மன் மகாலட்சுமி ராஜேஷ் கண்ணா, வக்கீல் திருப்பதி, அவைத் தலைவர் ராமசாமி முன்னிலை வகித்தனர்.

கவுன்சிலர் இளங்கோவன் வரவேற்றார். மாவட்ட செயலாளர்-முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் நீர்மோர் பந்தலை திறந்து வைத்து பேசினார். இதில் பேரூர் துணைச்செயலாளர் சந்தனதுரை, பேரவை பேரூர் செயலாளர் தன சேகரன், முன்னாள் கவுன்சிலர்கள் சூர்யா, திருப்பதி, சங்கு, நிர்வாகிகள் ரவி, வில்லி ரங்கராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக அ.தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை படிவத்தை ஆர்.பி. உதயகுமார் பேரூர் செயலாளர் அசோக்குமாரிடம் வழங்கினார்.

Tags:    

Similar News