உள்ளூர் செய்திகள்

பள்ளத்தில் தவறி விழுந்த சாலை பணியாளர் பரிதாப சாவு

Published On 2023-11-02 06:41 GMT   |   Update On 2023-11-02 06:41 GMT
  • திருமங்கலம் அருகே பள்ளத்தில் தவறி விழுந்த சாலை பணியாளர் பரிதாப இறந்தார்.
  • பொக்லைன் வாகனம் ஏறியதில் உடல் நசுங்கியது.

திருமங்கலம்

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருணாச்சலபுரத்தை சேர்ந்தவர் பால்பாண்டி (வயது53). சாலை பணியாளரான இவர் வெவ்வெறு ஊர்களுக்கு சென்று வேலை பார்த்து வந்தார். மதுரை மாவட்டம் திருமங்க லம்-ராஜபாளையம் நான்கு வழிச்சாலை பணிகள் நடந்து வருகிறது. இதில் பால்பாண்டி வேலை பார்த்து வந்தார்.

திருமங்கலம் அருகே ராஜபாளையம் பிரிவுப் பகுதியில் நேற்று இரவு வேலை மும்முரமாக நடந்து கொண்டிருந்தது.

அங்கு பணியில் இருந்த பால்பாண்டி அங்குள்ள பள்ளத்தில் தவறி விழுந்தார்.

இதனை யாரும் கவனிக்கவில்லை. அப்போது அங்கு வந்த பொக்லைன் எந்திரம் பள்ளத்தில் ஏறி இறங்கியது. இதில் பால்பாண்டி உடல் நசுங்கி சம்பவ இடத்தி லேயே பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து திருமங்கலம் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News