உள்ளூர் செய்திகள்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 6-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அ.தி.மு.க. ஓ.பி.எஸ். அணியினர் மாவட்ட செயலாளர்கள் முன்னாள் எம்.பி.கோபாலகிருஷ்ணன், அய்யப்பன் எம்.எல்.ஏ. முருகேசன் ஆகியோர் தலைமையில் அமைதி பேரணி நடந்தது.

ஜெயலலிதா நினைவு நாள்-அ.தி.மு.க. ஓ.பி.எஸ். அணியினர் அமைதிப்பேரணி

Published On 2022-12-05 08:08 GMT   |   Update On 2022-12-05 08:08 GMT
  • முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு நாளையொட்டி அ.தி.மு.க. ஓ.பி.எஸ். அணியினர் அமைதிப்பேரணி நடத்தினர்.
  • மதுரை தமிழ்ச் சங்கத்தில் இருந்து மாவட்ட நீதிமன்றம் வரை அமைதி ஊர்வலம் நடைபெற்றது.

மதுரை

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு தினம் மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. ஓ.பி.எஸ். அணி சார்பில் அனுசரிக்கப்பட்டது. மாவட்ட செயலாளர் முன்னாள் எம்.பி. கோபால கிருஷ்ணன் தலைமை வகித்தார்.

மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் அய்யப்பன் எம்.எல்.ஏ., வடக்கு மாவட்ட செயலாளர் முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மதுரை தமிழ்ச் சங்கத்தில் இருந்து மாவட்ட நீதிமன்றம் வரை அமைதி ஊர்வலம் நடைபெற்றது.

பின்னர் அங்குள்ள எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு மாவட்ட செயலாளர்கள் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்த நிகழ்ச்சியில் பி.எஸ். கண்ணன், வி.கே.எஸ்.மாரிசாமி, முத்து இருளாண்டி,அண்ணா தொழிற்சங்க செயலாளர் வையமாரி துரை, மீனவரணி செயலாளர் ராமநாதன், ஒத்தக்கடை பாண்டியன், உசிலைபிரபு, கருப்பையா, கொம்பையா,கண்ணன், வேல்முருகன், ஆரைக்குடி முத்துராமலிங்கம், மிசா செந்தில் மற்றும் 200 பெண்கள் உள்பட 1000- க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News