உள்ளூர் செய்திகள்

அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் விழாக்குழு அமைக்கக்கூடாது

Published On 2023-06-05 08:21 GMT   |   Update On 2023-06-05 08:21 GMT
  • அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் விழாக்குழு அமைக்கக்கூடாது.
  • மதுரை ஐகோர்ட்டில் ஆணையர் விளக்கமளித்தார்.

மதுரை

மதுரையை சேர்ந்த முருகன் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-

மதுரை மாவட்டம் அலங்கா நல்லூரில் முனியாண்டி சுவாமி கோவில்கள் அமைந்துள்ளது. இந்த கோவில்கள் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. இந்த கோவில் திருவிழாக்களில் எந்த தனி நபர் கமிட்டியின் அமைக்க கூடாது என்று ஏற்கனவே 2017-ம் ஆண்டு உயர்நீதி மன்ற உத்தரவு உள்ளது.

இந்தநிலையில் அடுத்த ஆண்டு ஏப்ரல் 4-ந்தேதி நடைபெற இருக்கக்கூடிய பங்குனி திருவிழாவில் தனி நபர்களை கொண்டு அறநிலைத்துறை அதிகாரிகள் கமிட்டி அமைத்து திருவிழா நடத்துவதற்கு ஏற்பாடு செய்துள்ளனர். எனவே 2017-ம் ஆண்டு உத்தரவை பின்பற்றி எந்த தனி நபர்களும் தற்காலிக கமிட்டி அமைத்து திருவிழா நடத்தாமல் கோவில் இந்து சமய அறநிலை துறை நேரடியாக திருவிழாவை நடத்த உத்திரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு முந்தைய விசாரணையில், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந் நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கௌரி அமர்வு முன்பு விசார ணைக்கு வந்தது.

அப்போது இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் முரளிதரன் நேரில் ஆஜராகி அறிக்கை தாக்கல் செய்தார்.

அதில் தமிழகத்தில் இந்து சமய அறநிலைத்துறை கீழ் செயல்படும் கோவில்களில் திருவிழா காலங்களில் குழு அமைப்பதால் பல்வேறு புகார்கள் வழக்குகள் வருகின்றது. எனவே இந்து சமய அறநிலையத்துறை சட்டத்தின் படி விழா குழு அமைக்க எந்த விதிகளும் இல்லை.

எனவே எதிர்காலங்களில் திருவிழா குழு அமைக்க கூடாது என அனைத்து கோவில் செயல் அலுவலர்க ளுக்கும் அறிக்கை அனுப்பப் பட்டுள்ளது என்றும், இதனை மீறும் அலுவலர்கள் மீது கடுமையான நடவ டிக்கை எடுக்கப்படும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்ற உத்தரவை தாக்கல் செய்தார்.

இதனை பதிவு செய்த நீதிபதிகள் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைத்து உத்தரவு பிறப்பித்தனர்.

Tags:    

Similar News