உள்ளூர் செய்திகள்

குழந்தை இல்லாத ஏக்கத்தில் தூக்கில் தொங்கிய தம்பதி

Published On 2023-08-15 08:24 GMT   |   Update On 2023-08-15 08:24 GMT
  • குழந்தை இல்லாத ஏக்கத்தில் தம்பதி தூக்கில் தொங்கினர்.
  • தெப்பக்குளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை

மதுரை ஐராவதநல்லூர் யாதவர் தெருவை சேர்ந்த வர் அருண்குமார். இவரது மனைவி ஜெயலட்சுமி (வயது 26). இவர்களுக்கு 2018-ம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணம் முடிந்து 5 ஆண்டுகள் ஆகியும் இவர்களுக்கு குழுந்தை இல்லை. குழந்தை பேருக் காக பல மருத்துவமனையில் சிகிச்சையும் பெற்று வந்த னர்.

குழந்தை இல்லாத ஏக்கத்தில் இருவரும் மன அழுத்தத்தில் இருந்து வந்தனர். இதனால் வாழ்யிக் கைல் விரத்தியடைந்த இரு வரும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர்.

சம்பவத்தன்று கணவன்- மனைவி இருவரும் தூக்கு போட்டு தற்கொலைக்கு முயன்றனர். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் உயிருக்கு போராடிய நிலை யில் இருந்த இருவரையும் மதுரை அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்கான கொண்டு சென்றனர்.

ஆனால் செல்லும் வழியிலேயே ஜெயலட்சுமி பரிதாபமாக உயிரிழந்தார். கணவர் அருண்குமாருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது. இந்த சம்ப வம் குறித்து ஜெயலட்சுமியின் தாயார் கன்னிசெல்வி தெப்பக்குளம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

குழந்தை இல்லாத ஏக்கத்தில் கணவன், மனைவி இருவரும் தற் கொலை முயற்சி செய்தது அப்பகுதில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News