உள்ளூர் செய்திகள்

சரக்கு ரெயில்கள் மூலம் ரூ.78.54 கோடி வருமானம்

Published On 2022-07-10 09:07 GMT   |   Update On 2022-07-10 09:07 GMT
  • சரக்கு ரெயில்கள் மூலம் ரூ.78.54 கோடி வருமானம் கிடைத்துள்ளது.
  • மேற்கண்ட தகவலை மதுரை கோட்ட ரெயில்வே செய்தி தொடர்பு அலுவலகம் தெரிவித்து உள்ளது.

மதுரை

மதுரை கோட்ட வர்த்தக வளர்ச்சி குழுவின் தொடர் முயற்சியால் புதிய, புதிய பொருட்கள் சரக்கு ெரயில்கள் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது. இவற்றில் கட்டுமானத்துக்கான சரளை கற்கள் (0.34 லட்சம்), உணவு தயாரிப்புக்கான சோயா பீன்ஸ், விவசாயத்துக்கான உரம் (3.26 லட்சம்), வடகிழக்கு மாநிலங்களுக்கு மரக்கரி (0.55 லட்சம்), தென்மேற்கு ராஜஸ்தானுக்கு டிராக்டர்கள் (0.7 லட்சம்), சிமெண்ட் தயாரிப்புக்கான சுண்ணாம்புக்கல் (1.04 லட்சம்), ஜிப்சம் (0.08 லட்சம்) ஆகியவை குறிப்பிடத்தக்கவை.

மதுரை கோட்டத்தில் ஒட்டுமொத்தமாக 7.16 லட்சம் டன் சரக்குகள் கையாளப்பட்டு உள்ளன. இதன் மூலம் நடப்பு காலாண்டில் ரூ.78.54 கோடி வருமானம் ஈட்டப்பட்டு உள்ளது.

அதிலும் குறிப்பாக கடந்த ஜூன் மாதம் மட்டும் 2.55 லட்சம் டன் சரக்குகள் கையாளப்பட்டு உள்ளன. இது கடந்த ஆண்டை காட்டிலும் 36.78 சதவீதம் அதிகம். ரெயில்வே வாரிய இலக்கை விட 30.34 சதவீதம் அதிகம்.

கடந்த ஜூன் மாதம் மட்டும் 2.55 லட்சம் டன் சரக்குகள் கையாளப்பட்டு உள்ளன. இது கடந்த ஆண்டை காட்டிலும் 36.78 சதவீதம் அதிகம். ெரயில்வே வாரிய இலக்கை விட 30.34 சதவீதம் அதிகம்.

தென்னக ரெயில்வே சரக்கு போக்குவரத்து வருமானமாக ரூ.922 கோடி ஈட்டி உள்ளது. இது கடந்த ஆண்டை விட 36 சதவீதம் அதிகம். கடந்த ஜூன் மாதம் மட்டும் 3.114 மில்லியன் டன் சரக்குகள் கையாளப்பட்டு உள்ளன. இது கடந்த ஆண்டை காட்டிலும் 53 சதவீதம் அதிகம்.

மேற்கண்ட தகவலை மதுரை கோட்ட ரெயில்வே செய்தி தொடர்பு அலுவலகம் தெரிவித்து உள்ளது.

Tags:    

Similar News