உள்ளூர் செய்திகள்

கொள்ளையடிக்க ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த 5 பேர் கைது

Published On 2023-05-22 09:17 GMT   |   Update On 2023-05-22 09:17 GMT
  • கொள்ளையடிக்க ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
  • போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை

மதுரை தல்லாகுளம் போலீசார் சம்பவத்தன்று டாக்டர் தங்கராஜ் சாலையில் ரோந்து சென்றனர். அப்போது நீச்சல் குளம் அருகே சந்தேகத்திற்கிடமாக 6 பேர் நின்றிருந்தனர். அவர்கள் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றனர். உடனே சுதாரித்துக் கொண்ட போலீசார் அவர்களை விரட்டி சென்றனர். இதில் 5 பேர் சிக்கினர். ஒருவன் தப்பி ஓடி விட்டான்.

போலீசில் சிக்கிய வர்களிடம் விசாரணை நடத்திய போது முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை சோதனையிட்டபோது 2 கத்திகள், ஒரு பட்டாக்கத்தி, கயிறுகள், மிளகாய் பொடி பாக்கெட்டுகள் ஆகியவை இருந்தது தெரியவந்தது.

அதனை பறிமுதல் செய்த போலீசார் 5 பேரையும் கைது செய்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் கோரிப்பாளையம் வேலாயுதம் பிள்ளை தெருவை சேர்ந்த மதுரை வீரன் மகன் ரிஷிக்குமார் (வயது 19), சோமசுந்தரம் பிள்ளை தெருவை சேர்ந்த குமரவேல் மகன் விநாயகர் சந்துரு, சின்ன கண்மாய் தெருவை சேர்ந்த ராஜசேகர் மகன் சஞ்சய் (20) மற்றும் 17 வயதுடைய 2 நபர்கள் என தெரியவந்தது.

இவர்கள் அந்தப் பகுதியில் தனியாக வருபவர்களை நோட்டமிட்டு கொள்ளையடிக்க திட்டமிட்டார்களா? அல்லது வேறு ஏதேனும் குற்ற சம்பவங்களில் ஈடுபட ஆயுதங்களை வைத்திருந்தார்களா? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News