உள்ளூர் செய்திகள்

லாரி டிரைவர்-கிளீனரை தாக்கி பணம் பறித்த 4 வாலிபர்கள் கைது

Published On 2023-02-01 07:00 GMT   |   Update On 2023-02-01 07:00 GMT
  • திருமங்கலம் அருகே லாரி டிரைவர்-கிளீனரை தாக்கி பணம் பறித்த 4 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
  • வழிப்பறி நடந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. காமிரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்து விசாரித்தனர்.

திருமங்கலம்

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் சிவபாபு(வயது26). லாரி டிரைவரான இவர் கடந்த 25-ந் தேதி மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் தொழிற்பேட்டைக்கு இன்வெர்ட்டர் பேட்டரிகளை ஏற்றி வந்தார்.

அப்ேபாது நிறுவனம் மூடப்பட்டிருந்ததால் லாரி தொழிற்பேட்டை பகுதியில் நிறுத்தினார். பின்னர் சிவபாபு, கிளீனர் சூரஜூடன் சாப்பிடுவதற்காக கூத்தியார்குண்டு சென்றார்.சர்வீஸ் ரோடு பகுதியில் நடந்து சென்றபோது 2 பேரையும் வழிமறித்த கும்பல் சரமாரியாக தாக்கிவிட்டு ரூ.5 ஆயிரம் ெராக்கம், 2 செல்போன்களை பறித்து சென்றது. இந்த தாக்குதலில் சிவபாபு, சூரஜ் ஆகியோர் காயமடைந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக திருமங்கலம் டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து வழிப்பறி கொள்ளையர்களை தேடும் பணியை தீவிரப்படுத்தினர். வழிப்பறி நடந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. காமிரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்து விசாரித்தனர்.

அதில் லாரி டிரைவர்-கிளீனரை தாக்கி பணம் பறித்தது கூத்தியார்குண்டை சேர்ந்த கண்ணன் மகன் ராஜலிங்கம்(21), ராஜேந்திரன் மகன் விஜயராஜா(27), முருகன் மகன் ராஜவேலு(27), கணேசன் மகன் பிரபாகரன்(27) என தெரியவந்தது. இதையடுத்து 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News