உள்ளூர் செய்திகள்

வாலிபர் உள்பட 2 பேர் தற்கொலை

Published On 2023-05-14 08:29 GMT   |   Update On 2023-05-14 08:29 GMT
  • வாலிபர் உள்பட 2 பேர் தற்கொலை செய்தனர்.
  • போலீசார் வழக்குப்பதிவுசெய்து விசாரணை நடத்தினர்.

மதுரை

பெத்தானியாபுரம் பாத்திமாநகர் 2-வது தெருவை சேர்ந்தவர் சுரேஷ் (49).இவர் பல்வேறு இடங்களில் கடன் வாங்கி இருந்தார். கடனை திருப்பிச்செலுத்த முடியாமல் மன அழுத்தத்தில் இருந்தார். இந்த நிலையில் சுரேஷ் வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மனைவி செல்வி கொடுத்த புகாரின்பேரில் கரிமேடு போலீசார் வழக்குப்பதிவுசெய்து விசாரணை நடத்தினர்.

பி.பி.குளம் முல்லைநகர் மாரிமுத்து மகன் வினோத்குமார்(30).இவர் சில நாட்களாக மன அழுத்தத்தில் இருந்தார். வீட்டில் தனியாக இருந்தபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து தாயார் சுமதி கொடுத்த புகாரின்பேரில் தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவுசெய்து விசாரணை நடத்தினர்.

Tags:    

Similar News