உள்ளூர் செய்திகள்
- திப்பட்டி அருகே செல்லும் போது பெட்ரோல் போடுவதற்காக சாலையின் ஓரம் மெதுவாக சென்றார்.
- அந்த வழியாக வந்த டாட்டா ஏசி சின்னபையன் மீது மோதியது.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள கேட்டிரெட்டிபட்டி கிராமத்தை சேர்ந்தவர் சின்னபையன் (வயது 57).லாரி டிரைவராக வேலை பார்த்து வந்தார்.
சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் தருமபுரி பென்னாகரம் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது திப்பட்டி அருகே செல்லும் போது பெட்ரோல் போடுவதற்காக சாலையின் ஓரம் மெதுவாக சென்றார். அப்போது அந்த வழியாக வந்த டாட்டா ஏசி சின்னபையன் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சின்னபையன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து பாப்பாரப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.