உள்ளூர் செய்திகள்

சாராயம் விற்பனை தி.மு.க. பெண் கவுன்சிலர் கணவர் கூட்டாளிகள் கைது

Published On 2023-05-26 09:36 GMT   |   Update On 2023-05-26 09:36 GMT
  • சாராயம் விற்பனை தி.மு.க. பெண் கவுன்சிலர் கணவர் கூட்டாளிகள் கைது செய்யப்பட்டனர்
  • தனிப்படை போலீசார விசாரணை நடத்தி வருகின்றனர்.

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள எக்கியர் குப்பத்தில் விஷ சாராயம் குடித்து 13 பேர்உயிரிழந்தனர். இதையடுத்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் சாராயம் விற்பனை செய்தவர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர். இந்த நிலையில் ஏற்கனவே இந்த வழக்கில் தொடர்பு டையதாக கூறப்படும் திண்டிவனம் நகராட்சி 20-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் ரம்யாவின் கணவர்பிரபல சாராய வியாபாரி மரூர் ராஜா கைது செய்யப்பட்டு குண்டத் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடை க்கப்பட்டுள்ளார். தி.மு.க. கவுன்சிலர் கணவர் பிரபல சாராய வியாபாரி மரூர் ராஜாவின் கூட்டாளிகளான கீழ்புத்தேரி பகுதியைச் சேர்ந்த இளய செல்வம் , ஜெயசீலன் ஆகிய 2 பேரை சுற்றி வளைத்து பிடித்த தனிப்படை போலீசார அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News